follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1சிறுவர் துஷ்பிரயோகம், கற்பழிப்பு வழக்குகள் 2 இலட்சத்தினை தாண்டியது

சிறுவர் துஷ்பிரயோகம், கற்பழிப்பு வழக்குகள் 2 இலட்சத்தினை தாண்டியது

Published on

இலங்கை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் 33% சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் முழு நீதித்துறை அமைப்பிலும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான சுமார் 24,700 வழக்குகள் இருப்பதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

“.. இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்களில் உள்ள 29,700 வழக்குகளில், 9,800 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது உயர் நீதிமன்றங்களில் 33% வழக்குகள் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள். இந்த நிலைக்கு நாம் வருந்த வேண்டும்.

சட்டத்தால் மட்டும் சமூகத்தை சரியான பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. சமூக நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்…” என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...