follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP1உலகிலேயே முதல்முறையாக 'சிகரெட்' விடயத்தில் கனடா தனித்துவமான தீர்மானம்

உலகிலேயே முதல்முறையாக ‘சிகரெட்’ விடயத்தில் கனடா தனித்துவமான தீர்மானம்

Published on

புகையிலை கட்டுப்பாட்டை குறைக்க கனடா விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு சிகரெட்டிலும் புகைபிடிப்பதால் புற்றுநோய் வரும் என்ற எச்சரிக்கை வாசகத்தை அச்சிட முடிவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாக்கியங்களை அச்சிடும் உலகின் முதல் நாடு கனடா.

“புகையிலை புற்றுநோயை உண்டாக்குகிறது” மற்றும் “ஒவ்வொரு சிகரெட்டிலும் விஷம்” ஆகியவை கனடா அச்சிட விரும்பும் இரண்டு எச்சரிக்கை வாக்கியங்கள்.

இதனை ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் அச்சிட கனடா முடிவு செய்துள்ளது.

இளையோர் சிகரெட் பயன்படுத்துவதை தடுப்பதே இதன் நோக்கம் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது.

இந்த சட்டங்கள் ஜூலை 2024 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும்.

2026க்குள், ஒவ்வொரு சிகரெட்டிலும் மேலும் 06 எச்சரிக்கை வாக்கியங்கள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் 2035ம் ஆண்டுக்குள் சிகரெட் பயன்பாட்டை 5 சதவீதமாக குறைக்க கனடா முயற்சித்து வருகிறது.

கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்பதால் 48,000 பேர் இறக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...