follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜப்பான் நிதியுதவியுடன் 8,360 மெட்ரிக் டன் உரம் கையளிப்பு

ஜப்பான் நிதியுதவியுடன் 8,360 மெட்ரிக் டன் உரம் கையளிப்பு

Published on

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எதிர்வரும் பருவத்தில் விநியோகிப்பதற்காக 8,360 மெட்ரிக் டன் யூரியா உரத்தை விவசாய அமைச்சகத்திற்கு வழங்கியுள்ளது.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் மூலம் இது வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் உலர் மற்றும் இடைநிலை வலயங்களில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள 228,000 சிறிய நெல் விவசாயிகளுக்கு அத்தியாவசிய உரங்கள் விநியோகிக்கப்படும், சிறிய அளவிலான நெல் விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் விநியோகிக்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றன.

குருநாகல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு ஹெக்டேர் வரையிலான நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளை இலக்காகக் கொண்டு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...