follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுரயிலில் பயணித்த சீன சுற்றுலா பயணியை தாக்கிய இருவர் கைது

ரயிலில் பயணித்த சீன சுற்றுலா பயணியை தாக்கிய இருவர் கைது

Published on

கொழும்பு கோட்டையில் இருந்து பயணித்த ரயிலில் சீன சுற்றுலாப் பயணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருட முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயிலில் பயணித்த சீனப் பெண்ணின் கையை, வெளியிலிருந்து தடியால் தாக்கி, அவரின் கைபேசியை சந்தேகநபர்கள் கொள்ளையிட முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் சீன பெண்ணின் தொலைபேசியில் பதிவாகியுள்ளதுடன் அவரது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாவலப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரண்டு சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...