மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.