செலுத்தப்படாததாகக் கூறப்படும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தானோ அல்லது தனது தந்தையோ இதுவரையில் எவ்வித மின்கட்டணமும் பெறவில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற தனது திருமண விருந்துக்கான மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாமலின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததாகக் கூறப்படுவது ராஜபக்ச குடும்பத்தை அவதூறு செய்யும் சதி என்று கூறியிருந்தார்.