follow the truth

follow the truth

August, 19, 2025
Homeஉள்நாடுசிவில் பாதுகாப்புப் படை தேய்வடையும் படையாக இனங்காணப்பட்டுள்ளது

சிவில் பாதுகாப்புப் படை தேய்வடையும் படையாக இனங்காணப்பட்டுள்ளது

Published on

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஏதாவது ஒரு வகையில் செயற்படுவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு கோபா குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆலோசனை வழங்கினார்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தொடர்பான அரசாங்கக் கொள்கையுடன் பொருந்தும் வகையில் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டரீதியான கட்டமைப்பை தயாரிப்பது தொடர்பில் செப்டம்பர் 11 ஆம் திகதிக்கு முன்னர் திகதிகளுடன் கூடிய அறிக்கையை கோபா குழுவுக்கு வழங்குமாறும் லசந்த அழகியவண்ண பரிந்துரை வழங்கினார்.

மூன்றரை வருடங்களாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்புகள் செய்யப்பட்டில்லை என்றும் சிவில் பாதுகாப்புப் படை தேய்வடையும் படையாக இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது தெரிவத்தனர்.

அத்துடன், தற்பொழுது 33,687 பேர் சிவில் பாதுகாப்புப் படையில் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அதன் விபரங்களையும் குறிப்பிட்டனர்.

அத்துடன், இந்தப் படையை ஸ்தாபித்தல் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன இதன்போது தெளிவுபடுத்தினார்.

அதற்கு மேலதிகமாக, தேவைக்கு அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்வனவுகள், இந்தத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் இந்தப் படையினால் பயிரிடப்பட்ட தானியங்கள், விளைச்சல்களை விற்பனை செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...