follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகடும் வறட்சி - சுமார் 100,000 பேர் பாதிப்பு

கடும் வறட்சி – சுமார் 100,000 பேர் பாதிப்பு

Published on

நாட்டில் நிலவும் வறட்சியினால் ஒன்பது மாவட்டங்களில் சுமார் 100,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் 30,862 குடும்பங்களைச் சேர்ந்த 99,594 பேர் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 69,000 இற்கும் மேற்பட்ட நபர்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் சங்கானைப் பிரதேசம் ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழைவீழ்ச்சி பதிவாகாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...