follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசீனி வரி மோசடி - இழப்பை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சிடம் கேள்வி

சீனி வரி மோசடி – இழப்பை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சிடம் கேள்வி

Published on

சீனி வரி மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு, நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சுத் தவறியமை குறித்தும் குழு தனது அதிருப்தியை வெளியிட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா வருகை தராத நிலையில் அக்குழு பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் குழு கேள்வியெழுப்பியது. இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து குழுவுக்குத் தெரியப்படுத்துவதாக இங்கு வருகை தந்திருந்த நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்ததுடன், இவ்விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழங்கை முன்னெடுத்துச் செல்லுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை மீளப்பெற்றுக் கொண்டால் நடவடிக்கை எடுக்க முடியுமா எனவும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இங்கு குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கரிசனையைக் குழுவுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் குழு வேண்டுகோள் விடுத்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...