follow the truth

follow the truth

August, 22, 2025
Homeஉள்நாடு100 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய அனுமதி

100 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய அனுமதி

Published on

6 மாத காலத்திற்கு 100 மெகா வோல்ட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) அனுமதி வழங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 3 முக்கிய நிபந்தனைகளின் கீழ் 2023 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த 3 நிபந்தனைகள் பின்வருமாறு

1. கொள்முதல் தகுதியின் அடிப்படையில் குறித்த மின்சாரம் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்பதோடு, மின்சார கொள்முதல் ஒப்பந்த காலத்தின் முடிவில் கொள்முதல் பற்றிய சுயாதீன தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. கொத்மலை பொல்பிட்டிய 220 kv மின் அமைப்பை 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் செயற்படுத்த வேண்டும்.

3. இந்த மின்சார கொள்முதல் குறைந்தபட்ச செலவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...