follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்இங்கிலாந்தில் 7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற தாதி

இங்கிலாந்தில் 7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற தாதி

Published on

வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் பிறந்த குழந்தை பிரிவில் ஏழு புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொன்றது மற்றும் மேலும் ஆறு குழந்தைகளைக் கொல்ல முயன்ற வழக்கில் தாதி ஒருவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லூசி லெட்பி என்ற 33 வயதான தாதி, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், கவுண்டஸ் ஒஃப் செஸ்டர் மருத்துவமனையில் ஐந்து ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண் குழந்தைகளையும் கொன்றது மற்றும் 6 குழந்தைகளைத் தாக்கி கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் 10 மாத விசாரணையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், லெட்பியை பிரிட்டனின் மிகச் சிறந்த தொடர் குழந்தை கொலையாளிகளில் ஒருவராக இருந்துள்ளார்.

நோய் வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், இரைப்பை குழாயில் காற்றை செலுத்தியும் அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் லூசி லெட்பிக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...