follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுதூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் 05 ஆம் திகதி முதல் ஆரம்பம்

தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் 05 ஆம் திகதி முதல் ஆரம்பம்

Published on

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் நாளை(01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 1,600 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ஸ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இன்று (31) முதல் 50 சதவீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வழமையான நேரங்களுக்கு அமைய நாளை (01) முதல் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாளை (01) முதல் அலுவலக ரயில் சேவைகள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளை எதிர்வரும் 05ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...