follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுபுதிய வரி செலுத்துனர்களைப் பதிவுசெய்ய விசேட திட்டம்

புதிய வரி செலுத்துனர்களைப் பதிவுசெய்ய விசேட திட்டம்

Published on

உழைக்கும் போது செலுத்தும் வரி தொடர்பில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்கு தலையீடு செய்வதாகப் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

வரித்திருத்த நடவடிக்கையின் போது பாதிக்கப்படும் தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொழிற்சங்கங்கள் சிலவற்றுடன் கலந்துரையாடுவதற்காக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்றத்தில் கூடியிருந்தது.

இதுவரை வரிச் செயற்பாடுகளுடன் தொடர்புபடாத நபர்களைத் தொடர்புபடுத்திக் கொள்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு அமைய புதிய வரி செலுத்துவோரைக் குழுவாகப் பதிவுசெய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

வரிப் பிரச்சினைகள் காரணமாக பல்வேறு துறைசார் நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றமையையும் குழு ஏற்றுக் கொண்டது. இதற்கு அமைய அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் வலியுறுத்துவதாகவும் குழு தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...