follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP3கெரவலப்பிட்டி குப்பைமேடு கழிவு முகாமைத்துவ பூங்காவாக அபிவிருத்தி

கெரவலப்பிட்டி குப்பைமேடு கழிவு முகாமைத்துவ பூங்காவாக அபிவிருத்தி

Published on

வத்தளை, கெரவலப்பிட்டி குப்பை மேடு கழிவு முகாமைத்துவ பூங்காவாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கமைய, கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக தூய்மையான சூழலைப் பேணுவதற்காக, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிப்பதுடன், எரி எண்ணெய் உற்பத்தி, முதன்மை கரி உற்பத்தி மற்றும் பிற புதுமையான பொருட்களை உற்பத்தி செய்து இந்த பூங்கா உருவாக்கப்பட உள்ளதாக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் மக்குகின்ற குப்பைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 20 மெற்றிக் தொன் குப்பைகள் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டு சில்லறை சந்தைக்கு விடப்படுகிறது.
கெரவலபிட்டி குப்பை மேட்டில் சுமார் 1500 தொன் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...