follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சீதா யானை சிகிச்சைக்காக கண்டிக்கு

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சீதா யானை சிகிச்சைக்காக கண்டிக்கு

Published on

மஹியங்கனை பெரஹராவில் ஊர்வலம் சென்ற துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சீதா யானை தற்போது பேராதனை கால்நடை வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அஷோக தங்கொல்லவின் தலைமையில் சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை பெரஹராவில் ஊர்வலம் சென்ற பின்னர் ஓரிடத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த போது, சீதா யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

யானையின் உடலில் 8 ரவைகள் உள்ளமை ஸ்கேன் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீதா யானையின் உடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தூள் வகையை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, மஹரகம சீதா யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு மேம்பாட்டு அமைச்சினால் சுயதீன விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்த அழுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி...

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...