follow the truth

follow the truth

May, 5, 2025
Homeஉலகம்சீனா 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் - பென்டகன்

சீனா 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் – பென்டகன்

Published on

அணு ஆயுதங்களை அதி விரைவாக பெருக்கிவரும் சீனா 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் என அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் கணித்துள்ளது.

இதுதொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், ‘2027ஆம் ஆண்டுக்குள், 700 அணு ஆயுதங்களை சீனா தயாராக வைத்திருக்கும். 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும். ஓராண்டுக்கு முன்பு கணித்ததைவிட 2.5 மடங்கு அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை கொண்டிருக்கும்.

நிலம், கடல், காற்று ஆகியவைற்றை சார்ந்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதிலும் அணு ஆயுத படைகளின் விரிவாக்கத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும் சீனா முதலீடு செய்துவருகிறது.

அமெரிக்க, ரஷ்யா ஆகிய முன்னணி அணு ஆயுத நாடுகளை போன்று அணு ஆயுத முப்படைகளை சீனா கட்டமைத்துவருகிறது. அதாவது, நிலத்திலிருந்து பெரும் தொலைவிற்குப் பாயும் ஏவுகணைகள், வானிலிருந்து பாயும் ஏவுகணைகள், ஆழ்கடலில் இருந்து பாயும் ஏவுகணைகள் ஆகியவற்றை தயாரித்துவருகிறது.

சீனாவின் அணு ஆயுத எதிரி நாடுகளில் முதன்மை நாடான அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளும் திறனை வளர்த்து கொள்ள அந்நாடு முயலவில்லை. ஆனால், மற்ற நாடுகள் தாக்கதல் நடத்தாதவாறும் அப்படி நடத்தப்பட்டால் பின் விளைவுகள் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்துதல் விடுப்பதற்காகவும் சீனா இப்படி செய்துவருகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் இராணுவ வளர்ச்சி குறித்த அறிக்கையை அமெரிக்க பாதுகாப்புத்துறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், சீனாவின் இராணுவ தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவிடம் 200 அணு ஆயுதங்கள் தயாராக இருக்கிறது என்றும் 2030ஆம் ஆண்டுக்குள் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் பென்டகன் ஓராண்டுக்கு முன்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும்...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...