follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுநாட்டில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முயற்சி

நாட்டில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முயற்சி

Published on

முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவ வீரர்கள் உட்பட யுத்தத்தை முன்னெடுத்த அனைவருக்கும் அன்றும் இன்றும் நாளையும் தாம் மரியாதை செலுத்துவதாகவும், யுத்தத்தினால் அங்கவீனமானவர்களை கேலி செய்தால் அது கேவலமான செயலாகும் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

இராணுவ வீரர்கள் குறித்து புகழ் பாடுவது போலவே அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், 2022 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் ஊனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் வெட்டப்பட்டுள்ளன என்றும், இந்நாட்டில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும், நிவாரணத்தை குறைத்தால் மாற்று வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ரணவிரு அதிகார சபை இருந்தாலும், அவர்களுக்கு தேவையான ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், இது குறித்து அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் ஏராளம் உண்டு என்றும், தற்போதைய அரசாங்கத்தால் வெட்டப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை விடுத்த அவர் இதற்கு முறையான தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அங்கவீனமான இராணுவ வீரர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (20) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தி கருத்துத் தெரிவித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...