follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுபுறக்கோட்டை தீ விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில்

புறக்கோட்டை தீ விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில்

Published on

கொழும்பு – புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள ஆடை விற்பனை தொகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 23 பேர் கொழும்பு ​தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட குறிப்பிட்டார்.

இதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அனைவருக்கும் நச்சுப் புகையை சுவாசித்ததால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோயாளர்கள் அனைவரும் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என வைத்தியர் தெரிவித்தார்.

தீயினால் வர்த்தகத் தொகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் 11 தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...