உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் காப்புறுதித் தொகையை செலுத்துவதை ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்துமாறு சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவன அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் இன்று(08) உத்தரவிட்டுள்ளார்.
ஷாப்டரின் மரணம் குற்றம் என உறுதி செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பில் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு காப்புறுதி இழப்பீட்டை வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு காப்புறுதி நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.