follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதேங்கியுள்ள 10 இலட்சம் தபால் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

தேங்கியுள்ள 10 இலட்சம் தபால் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

Published on

தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் தமது கடமைகளை வழமை போல முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக தேங்கியுள்ள 10 இலட்சம் தபால் பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மற்றும் கண்டி தபால் அலுவலகங்களை தனியார் தரப்பினருக்கு வழங்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...

புத்தளத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற...