follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published on

நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆறு மாவட்டங்களில் உள்ள 36 பிராந்திய செயலகங்களுக்கு இன்று (13) மாலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை மற்றும் ஹப்புத்தளை, கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர உடுநுவர மற்றும் உடதும்பர பிரதேச செயலக பிரிவுகளுக்கும், தும்பனை பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியந்தோட்டை, அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, வரக்காபொல, குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, மாலிம்பட சாரஸ்ஸ, கொட்டாபொல பிடபெத்தர, ஹக்லிபிட்டிய மாவட்டத்தின் கம்புருபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான முதல் நிலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. .

இரத்தினபுரி மாவட்டத்தில் கிரியெல்ல, கஹவத்த, அயகம, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை எச்சரிக்கை அறிவிப்பும் இரத்தினபுரி, அஹெலியகொட, கொலன்னா மற்றும் பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...