follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் எதிர்கட்சித் தலைவரும் சந்திப்பு

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் எதிர்கட்சித் தலைவரும் சந்திப்பு

Published on

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று(14) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

2024 ஆம் ஆண்டுக்கான தற்போதைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.
கடந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவை உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே இவ்வருட வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தரப்பில் இருந்து நோக்கும் போது இது பாதகமான வரவு செலவுத் திட்டம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...