follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுநெதர்லாந்தினால் மீளக் கையளிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள்

நெதர்லாந்தினால் மீளக் கையளிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள்

Published on

ஒல்லாந்து காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது மீளக் கையளிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் பொருட்களை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு புத்தசாசன மற்றும் சமய, கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் இன்று (05) தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

நெதர்லாந்தின் பிரசித்தமான Rijks அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த, தங்கத்தால் தயாரிக்கப்பட்ட உறையுடன் கூடிய வாள், வெள்ளியினால் செய்யப்பட்ட உறையுடன் கூடிய வாள், தங்கத்தால் செய்யப்பட்ட கத்தி, துப்பாக்கிகள் இரண்டு (சுவர் துப்பாக்கிகள்), லெவ்கே பிரிவுக்கு சொந்தமானதென கருதப்படும் பீரங்கி, உள்ளிட்ட 06 தொல்பொருட்களும் 1765 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் கண்டி அரச மாளிகையை சுற்றிவளைத்த போது கிழக்கிந்திய ஒல்லாந்து நிறுவனத்தினால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

பிற்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் உறுதிப்பாடுகளை மையப்படுத்தி மேற்படி தொல்லியல் பொருட்களை இலங்கைக்கு மீளக் கையளிக்குமாறு இராஜதந்திர அடிப்படையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தும் விசேட நிகழ்வாக மேற்படி 06 தொல்லியல் பொருட்களும் உத்தியோகபூர்வமான இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த தொல்லியல் பொருட்கள் டிசம்பர் 05 முதல் மறு அறிவித்தல் வரையில் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் மக்கள் பாவனைக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...