follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுகல்கிஸ்ஸ கடற்கரையில் கரையொதுங்கிய ஆமை

கல்கிஸ்ஸ கடற்கரையில் கரையொதுங்கிய ஆமை

Published on

ஆழ்கடலில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஆமை ஒன்றின் பாரிய சடலம் இன்று (06) காலை கல்கிஸ்ஸ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சுற்றாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மீனவர்களால் அறிவிக்கப்பட்டதையடுத்து, கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், கல்கிசை பொலிஸ் உயிர்காப்பு திணைக்கள அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் தெஹிவளை பொலிஸ் அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொண்டு அத்திடிய வனவிலங்கு மீட்பு நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதேநேரம், கப்பல் விபத்துக்குள்ளான பேர்ல் எக்ஸ்பிரஸில் இருந்து மூழ்கிய வெள்ளை நிற பிளாஸ்டிக் பந்துகளும் கடற்கரையில் குவிந்து கிடப்பதாகவும், இதனால் ஆமைகள் அடிக்கடி இறந்திருக்கலாம் என்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கல்கிஸ்ஸ வெடிகந்த கடற்கரையில் இறந்த மூன்று ஆமைகளின் உடல்களும் குவிந்து கிடப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...