follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1இராணுவத்தின் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு

இராணுவத்தின் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு

Published on

இராணுவத்தினருக்கு உணவு வழங்கும் சப்ளையர்களின் நிலுவை பில்கள் கொடுப்பனவு தொடர்பில் 16.5 பில்லியன் ரூபா செலுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேலதிக மதிப்பீட்டிற்கு அரசாங்கத்தின் நிதிக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இராணுவத்தினருக்கு சரியான அளவு கலோரி உணவுகளை வழங்க முடியாவிட்டால், ஒரு நாடு தோல்வியடையும் என்பதால், தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடுவதன் மூலம் குழு உரிய ஒப்புதலை வழங்கியதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் செலவிடப்படும் தொகையுடன் ஒப்பிடும் போது முறையான போஷாக்கான உணவுகள் பெறப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து உறுதிப்படுத்தப்பட வேண்டுமென குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

ஒரு இராணுவ வீரருக்கு நாளொன்றுக்கு 3,400 கிலோகலோரி உணவு வழங்கப்பட வேண்டிய போதிலும், தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு அது சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை இராணுவ வீரர்களின் மன உறுதியையும் உடல் தகுதியையும் பாதிக்கிறது என்றும், 2021 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 30,000 பேர் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...