follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP1கொழும்பு மாநகர சபையின் கீழ் 329 மரங்கள் முறியும் அபாயத்தில்

கொழும்பு மாநகர சபையின் கீழ் 329 மரங்கள் முறியும் அபாயத்தில்

Published on

பொரளை பிரதேசத்தில் அதிகளவான மரங்கள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதன்படி பொரளை பிரதேசத்தில் ஆபத்தில் உள்ள 97 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குள் 329 ஆபத்தில் உள்ள மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

இந்த நாட்களில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், கொழும்பு நகரில் உள்ள ஆபத்தான 360 மரங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் பொலிசார் கொழும்பு மாநகர சபைக்கு அறிவித்துள்ளனர்.

கொழும்பு நகரில் ஆபத்தான 214 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை கூறுகிறது.

தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் நிபுணர்கள் குழு அண்மையில் கொழும்பு நகரில் அழிந்து வரும் மரங்களை ஆய்வு செய்ததுடன், அதன்படி 700 மரங்கள் பரிசோதிக்கப்பட்டன.

நாட்டின் எந்தவொரு நகரத்திலும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறிப்பிட்ட மரங்களை வெட்டுவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக மாகாண மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்

அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின்வாங்காமல்...

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4...

இஸ்ரேல் ஒரு புற்றுநோய் – வேரிலேயே அழிக்கப்பட வேண்டும் – ஈரான் கடும் விமர்சனம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமெனி மீண்டும் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார். இஸ்ரேல் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்பட வேண்டிய...