follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடுகூட்டுறவு வர்த்தகத்தைப் பாதுகாக்க உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் கொண்ட குழு

கூட்டுறவு வர்த்தகத்தைப் பாதுகாக்க உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் கொண்ட குழு

Published on

கூட்டுறவு வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்காக உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் குழுவொன்றை நியமிப்பதற்கு வங்கித்தொழில் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

வங்கித்தொழில் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், கூட்டுறவு வங்கிகளில் பணத்தை வைப்புச்செய்த வைப்பாளர்களுக்கு பணத்தை மீளச்செலுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தெஹிவளை-கல்கிஸ்சை கூட்டுறவு சங்கம் முகங்கொடுத்துள்ள நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சனச சம்மேளனம் மற்றும் ஹோமாகம பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு குழு பரிந்துரைத்தது.

இந்நாட்டின் பொருளாதார நெருக்கடி, கூட்டுறவுச் சங்கங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், அதிகாரிகளால் எடுக்கப்பட்ட கவனக் குறைவான தீர்மானங்கள் மற்றும் கணக்காய்வுகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமை போன்ற நான்கு விடயங்கள் இதற்கு முன்னர் குழு கூடிய பல்வேறு சந்தர்ப்பங்களில் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள்...

இன்று பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீச வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (09) பல தடவைகள்...

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...