follow the truth

follow the truth

May, 12, 2025
Homeவிளையாட்டு04வது போட்டியிலும் மண்ணை கவ்வியது பாகிஸ்தான்

04வது போட்டியிலும் மண்ணை கவ்வியது பாகிஸ்தான்

Published on

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் 04 ஆவது போட்டி இன்று நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்ககளை இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. அணி சார்பில் முஹம்மது ரிஸ்வான் 90 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 03 விக்கட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணிக்காக டார்லி மிச்சல் 72 ஓட்டங்களையும் கிளென் பிலிப்ஸ் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனால் போட்டித்தொடரில் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தானின் தொடர் தோல்விகள் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று (10) மாலை அமுலுக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த...

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஒத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றைய...