follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇந்த நேரத்தில் பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை

இந்த நேரத்தில் பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை

Published on

தற்போதைக்கு பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பதவிகளை மாற்றுவதை விட பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்துவதே தற்போதைய தேவை என அமைச்சர் வலியுறுத்துகிறார். அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் இன்று (19) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி – எதிர்காலத்தில் எந்த தேர்தல் நடைபெறவுள்ளது?
பதில் – அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறும். ஆனால் ஜனாதிபதியால் பொதுத் தேர்தலையும் நடத்த முடியும். அதற்கு நிறைய காலம் உள்ளது, ஆனால் நாங்கள் அபிவிருத்தித் திட்டத்தில் கவனம் செலுத்துகிறோம்.

கேள்வி – ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வேட்புமனு வழங்க கட்சி விரும்புகிறதா?

பதில் – அவர் கேட்பாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை. சொல்லவும் இல்லை. பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. அதன் பிறகு திருடர்களைப் பிடிக்க முடியும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...