follow the truth

follow the truth

June, 18, 2025
Homeவணிகம்மக்கள் வங்கியினால் 54 பில்லியனை வாராக் கடனாக தள்ளுபடி செய்வது தொடர்பான கதையின் உண்மை இதுதான்!

மக்கள் வங்கியினால் 54 பில்லியனை வாராக் கடனாக தள்ளுபடி செய்வது தொடர்பான கதையின் உண்மை இதுதான்!

Published on

மக்கள் வங்கியினால் 54 பில்லியனை வாராக் கடனாக தள்ளுபடி செய்வது தொடர்பான விவாதம் சமூக வலைத்தளங்களில் இந்த நாட்களில் பேசப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக சமூக ஊடகங்கள் ஊடாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.

மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (கொள்கைகள்) ஏ.யு.எல்.ஏ.அன்சார் மற்றும் மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (தொழில்முனைவோர் வங்கியியல்) விக்கிரம நாராயண ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.

அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்திருந்தனர்.

கடன் பெறும்போது ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவார்கள் என்றும், கடனை செலுத்தாவிட்டால், அவர்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சில கடனாளிகள் வந்து வங்கியில் பேசி மீண்டும் கால அட்டவணையை மாற்றிக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடனை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அபிவிருத்திக்கு உதவும் Fashion Bug

இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை...

HP மடிகணனிகளுக்கு 3 வருட பிரத்தியேக உத்தரவாதம்

Intel மற்றும் AMD புரொசசர்களுடன் கூடிய தெரிவு செய்யப்பட்ட HP மடிகணனிகளுக்காக மூன்று வருடத்திற்கான விசேட உத்தரவாதத்தினை HP இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விற்பனையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்தவன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. காரணம், இது தயாரிப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் முக்கிய நன்மைகளுக்கான அணுகலையும்...