follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடுசுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயார்

சுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயார்

Published on

நாட்டின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் 76ஆவது தேசிய சுதந்திர தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தின வைபவத்தின்; பிரதம அதிதியாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேதா தெவிசின் கலந்து கொள்ள உள்ளார். இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் மதம் மற்றும் கலாசார ரீதியில் சுமார் 700 வருடங்களாக பிரிக்கப்படாத நட்புறவு காணப்படுவதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் இந்தக் குழு இலங்கைக்கு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் வாய்ப்பாக இவ்வருட சுதந்திர தின விழாவை பார்க்க முடியும் என்றும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...