follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடுஉரிமையாளர்களால் விடுவிக்க முடியாத வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்க திட்டம்

உரிமையாளர்களால் விடுவிக்க முடியாத வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்க திட்டம்

Published on

உரிமையாளர்களால் விடுவிக்க முடியாத வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், இதன்மூலம் பெறப்படும் பணம், குறித்த வழக்குடன் தொடர்புடைய கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு வழக்கு நிறைவடைந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த வழக்கு பொருளுக்கு உரிய நபர் வழக்கில் வெற்றி பெற்றால் அந்த பணம் குறித்த நபருக்கு வழங்கப்படவுள்ளதுடன், அவர் வழக்கில் தோல்வியடைந்தால் அதனை அரசுடைமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வழக்கு விசாரணைகளுக்காக நீண்ட காலம் செலவிடப்படுகின்ற காரணத்தினால், பெரும்பாலான வழக்கு பொருட்கள் அழிவடைகின்றமை தொடர்பில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலான சட்டத்திருத்தம் விரைவில் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...