follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்சிலி நாட்டில் பயங்கர காட்டுத்தீ - அவசர நிலை பிரகடனம்

சிலி நாட்டில் பயங்கர காட்டுத்தீ – அவசர நிலை பிரகடனம்

Published on

சிலி நாட்டில் வல்பரைசோ பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயிரக்கணக்கான கட்டடங்கள், வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை முதல் காட்டுத் தீ பரவி வரும் நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு அவசர நிலையும் அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக், பிரகடனப்படுத்தியுள்ளார்.

சிலி வரலாறு காணாத அளவு காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. வல்பரைசோவில் மட்டும் சுமார் 7,000 ஹெக்டர் பரப்பளவுக்கு தீ பரவியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது

வல்பரைசோவுக்கு விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலா பயணிகள் பலர் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 1,400 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். ராணுவத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...