follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉள்நாடுகாம்பியா நாட்டு முறையில் முந்திரி பயிர்ச்செய்கை

காம்பியா நாட்டு முறையில் முந்திரி பயிர்ச்செய்கை

Published on

முந்திரி பயிர்ச்செய்கையில் காம்பியா பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க இலங்கையின் காம்பிய தூதுவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் போன்று சிறிய விவசாய நாடாக காம்பியா காணப்பட்டாலும் கடலை, முந்திரி போன்ற பல பயிர்களில் தன்னிறைவு பெற்றுள்ளதாக இலங்கைக்கான காம்பிய தூதுவர் முஸ்தபா ஜவாரா விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் தெரிவித்தார்.

காம்பியாவில் விளையும் முந்திரி பருப்பு இந்தியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக வருமானம் ஈட்டுகிறது காம்பியாவின் ஆற்றங்கரைகளின் இருபுறமும் முந்திரி அதிகளவில் பயிரிடப்படுவதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

புதிய வகை முந்திரி இனங்களை இனங்கண்டு நடவடிக்கை எடுக்காததே இந்நாட்டில் முந்திரிச் செய்கை வீழ்ச்சிக்குக் காரணம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். எனவே, காம்பியாவில் முந்திரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குமாறு காம்பியா தூதுவரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு – 03 நாட்களுக்கு நிறுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும்...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின்...