follow the truth

follow the truth

June, 1, 2025
HomeTOP135 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் இன்று இலங்கைக்கு

35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் இன்று இலங்கைக்கு

Published on

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு கொழும்பில் நாளை முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சீனா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் பல நாடுகளின் அமைச்சர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...