follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2"ஹரீனின் அறிக்கைகளை கண்டுகொள்ள வேண்டாம்"

“ஹரீனின் அறிக்கைகளை கண்டுகொள்ள வேண்டாம்”

Published on

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை தொடர்பில் தெரிவித்த கருத்து தெரியாமல் கூறியதொன்றாகும் எனவும், அவரின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க இன்று (20) தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை, வரலாற்றில் இருந்து இந்தியப் படையெடுப்புகளுக்கு எதிராகப் போராடும் நாடு என்பதனால் இலங்கை ஒருபோதும் இந்தியாவின் மாநிலம் அல்ல எனத் தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க, இந்தியாவுடனான நட்புறவின் காரணமாக இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

ஹரின் பெர்னாண்டோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் அல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் எனவும், அவரது அறிக்கைகள் பொதுஜன பெரமுனவால் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்காளர் தளம் பூஜ்ஜியமாக வீழ்ந்ததாகவும் தற்போது அதன் வாக்காளர் தளம் மீண்டும் அதிகரித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேண புதிய தலைமை வேண்டும் – சமிந்த

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு புதிய தலைமை தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கை...

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை திறக்க தீர்மானம்

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின்...