follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுபல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரிப்பு

பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரிப்பு

Published on

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதாகவும், இதனால் அவதானத்துடன் செயல்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், வடமேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் நாளையும் அவதானத்திற்குரிய மட்டத்தில் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையை அடுத்த சில நாட்களிலும் எதிர்பார்க்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வீட்டில் வைத்து கவனித்துக் கொள்ளுமாறும், சிறு குழந்தைகளை தனியாக வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...