follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகொரியாவிலிருந்து இலங்கைக்கு நிதி மானியம்

கொரியாவிலிருந்து இலங்கைக்கு நிதி மானியம்

Published on

ஒருகொடவத்தை இலங்கை – கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் நிறுவகத்தின் தற்போதைய வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக பதினைந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதி மானியமாக வழங்க கொரியா ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.

கொரியா ஏற்றுமதி இறக்குமதி வங்கியினால் வழங்கப்பட்ட 2900 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் இலங்கை-கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

16 மாத காலத்திற்குள் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், வாகன தொழில்நுட்பம், உற்பத்தி தொழில்நுட்பம், வெல்டிங் தொழில்நுட்பம், மின் தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம், தானியங்கி மற்றும் ரோபோ தொழில்நுட்பம், திரவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளின் பொதுவான தேவைகளை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இரு தரப்புக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி மற்றும் வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அனுமதி மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...