follow the truth

follow the truth

May, 16, 2024
HomeTOP2"நான் 69 இலட்சம் காலகன்னி அமைப்புக்கு எதிராகப் போராடிய பெண்"

“நான் 69 இலட்சம் காலகன்னி அமைப்புக்கு எதிராகப் போராடிய பெண்”

Published on

சிறைக்குச் செல்ல எனக்கு பயம் இல்லை. ‘சிறை கூடுகள்’ இருப்பது என்பது மக்கள் சிறைக்குச் செல்வதற்காகத்தான். சிறையில் இருந்து புத்தாண்டினை கொண்டாடுவேன். தலைமறைவாக உள்ளதாக சி.ஐ.டி. தெரிவித்தனர். தமிதா தலைமறைவாக இருக்கக்கூடிய பாத்திரம் அல்ல என நடிகை தமித அபேரத்ன தெரிவித்திருந்தார்.

69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கேடுகெட்ட முறைக்கு எதிராகப் போராடிய பெண் என சந்தேகநபர் தமிதா அபேரத்ன நேற்று (04) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் (04) கைது செய்யப்பட்ட பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் இன்று (05) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்த நிதி மோசடி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபர் தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் நேற்று (04) காலை கோட்டை நீதிமன்றத்திற்கு வந்த போதே கைது செய்துள்ளனர்.

பின்னர், வாக்குமூலத்தைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நிதி மோசடி சம்பவம் தொடர்பில் தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட உள்ளதால், அவர்களை நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து மூன்று இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்தத் தொகையை மோசடி செய்ததாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் மற்றும் அநுரவின் விவாதத்திற்கு பொது விடுமுறை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தை...

டயானாவுக்கு தாய்நாடு ‘இலங்கையாம்’

இரட்டைக் குடியுரிமை தொடர்பாக டயானா கமகேவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய விசேட தீர்ப்பின் பின்னர் நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்ட டயானா...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...