follow the truth

follow the truth

August, 26, 2025
HomeTOP2காலாவதியான க்ரீம்கள் விற்பனை செய்த இரண்டு மாடி கடைக்கு சீல்

காலாவதியான க்ரீம்கள் விற்பனை செய்த இரண்டு மாடி கடைக்கு சீல்

Published on

கொழும்பு 07 இல் உள்ள Odel வணிக வளாகத்தில் இருந்து அகற்றப்பட்ட காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்களை, விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த அத்துருகிரிய பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகார சபை நேற்று (08) நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தச் சோதனையின் போது கண்டெடுக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவை சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட நபர், குறித்த துணிக்கடையில் இருந்து பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு எடுத்துச் சென்று தள்ளுபடி செய்து விற்பனை செய்துள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...