follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2"மைத்திரி வெளிநாடு செல்வது சந்தேகம்"

“மைத்திரி வெளிநாடு செல்வது சந்தேகம்”

Published on

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ள பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தாம் செய்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக காவிந்த ஜயவர்தன நேற்று(10) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை அறிந்திருந்ததாகவும், அதனை மறைத்துவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமான நபரை மறைப்பதற்கு அல்லது விசாரணையை தவறாக வழிநடத்தும் நோக்கில் அவர் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி, அவரது கருத்துக்களில் இருந்து தப்ப முடியாது எனவும், அவ்வப்போது தனது அறிக்கைகளை மாற்றிக் கொள்வதாகவும் காவிந்த தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவிலிருந்து 3,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

நாட்டில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய இன்று முதல் விசேட நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக இன்று (21) முதல் விசேட...

ரணிலும் மைத்திரியும் சந்திப்பு

கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்ட முன்னாள் ஜனாதிபதி...