follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1இபோச நாளாந்த வருமானம் அதிகரிப்பு

இபோச நாளாந்த வருமானம் அதிகரிப்பு

Published on

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் பேருந்து சேவையின் ஊடாக இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 25 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

புத்தாண்டுக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக கடந்த 5ஆம் திகதி முதல் சுமார் 200 மேலதிக பேருந்துகளை இயக்குவதற்குச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

இதன்படி, இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 25 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதேவேளை, நெடுஞ்சாலைகளின் வருமானம் நேற்று 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்றும் 15ம் திகதிக்கும் இடையில் நெடுஞ்சாலைகளின் வருமானம் கணிசமான அளவு உயர்வாகவும் சாத்தியமாகுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு...

பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று...

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

வவுனியா நகரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்...