follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மாணவர்களுக்கு வழங்கவிருந்த மதிய உணவின் அரிசி தரமற்றது?

மாணவர்களுக்கு வழங்கவிருந்த மதிய உணவின் அரிசி தரமற்றது?

Published on

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு மனித பாவனைக்கு தகுதியற்றவை என இன்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை பொது பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் வைக்கப்பட்டவையே தரமற்றது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 அரிசி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், சுவையாளருக்கு அனுப்பப்பட்ட அறிக்கையின்படி, அவை மனித நுகர்வுக்குத் தகுதியற்றவை என்று பரிந்துரைக்கப்பட்டதாகவும் உபுல் ரோஹன தெரிவித்தார்.

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...