follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபாவனைக்கு பொருந்தாத பால் உற்பத்திகள் - தொழிற்சாலைக்கு சீல்

பாவனைக்கு பொருந்தாத பால் உற்பத்திகள் – தொழிற்சாலைக்கு சீல்

Published on

மனித பாவனைக்கு பொருத்தமற்ற பால் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு சீல் வைக்க கெக்கிராவை சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பால் சார்ந்த தயிர், ஐஸ்கிரீம், திரவ தயிர், பானங்கள், போன்ற பல பொருட்கள் அந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

குறித்த தொழிற்சாலையின் உற்பத்திப் பொருட்கள் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்படுவதுடன், பொருட்களின் நிலை குறித்து வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அந்த இடம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த உற்பத்தி நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து அவதானித்த அதிகாரிகள் குறித்த தொழிற்சாலைக்கு சீல் வைத்துள்ளனர்.

இதற்கிடையில், அந்த தொழிற்சாலையின் ஊழியர்களின் உடல்நிலை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், பல்வேறு தோல் நோய்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உணவு உற்பத்தி பணியில் ஈடுபடுத்தப்பட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...