follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1புதிய விசா முறைமை குறித்து சனத்தின் பதிவு

புதிய விசா முறைமை குறித்து சனத்தின் பதிவு

Published on

புதிய விசா முறைமையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்துவதை தாம் கண்டதாக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் தலைவரும் பிரதிநிதித்துவ அமைச்சருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தனது X கணக்கின் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தாம் உட்பட பல இலங்கையர்கள் வியர்வையையும் கண்ணீரையும் சிந்தி நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய நிதி ஆதாயம் இன்றி செயற்பட்டதாக அவர் கூறுகிறார். எனவே இவ்வாறு மீண்டு வந்துள்ள சுற்றுலா வர்த்தகம் புதிய விசா முறைமையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் சோர்வடைய வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.

“நான் உட்பட பல இலங்கையர்கள் வியர்வை, கண்ணீர் மற்றும் நிதி ஊக்குவிப்பு இல்லாமல் நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு பங்களித்தோம்.

“புதிய விசா முறை குறித்து சுற்றுலாப் பங்குதாரர்களிடமிருந்து நான் நிறைய கவலைகளைக் கண்டேன், இந்த சிக்கலை விரைவில் தீர்க்க சம்பந்தப்பட்ட அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் தனது குறிப்பில் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் அனைத்துப் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...