follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP2பலியான 6 மாத மழலை : இது யாருடைய தவறு?

பலியான 6 மாத மழலை : இது யாருடைய தவறு?

Published on

உலகில் உள்ள பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை விட விலைமதிப்பற்ற எதுவும் இல்லை.

குழந்தைகளுக்காக எதையும் செய்ய பெற்றோர்கள் இருமுறை யோசிப்பதில்லை.

ஆனால் இப்போது அந்த பொக்கிஷத்தை இழந்துவிட்டார்கள்.. இந்த ஆறுமாத மழலையின் கதி இன்னும் பலரால் நினைத்துப் பார்க்க முடியாதது.

தனது ஒரே பிள்ளையின் மரணம் தொடர்பில் சாட்சியமளித்த மேதாவத்தை ஜயந்த தர்மசிறி,

“எங்கள் ஒரே குழந்தை இறந்து விட்டது. மகன் பிறக்கும் போது மிகவும் ஆரோக்கியமாக இருந்தான். சாதாரண பிரசவம் நடந்தது.

அவருக்கு ஏப்ரல் 20-ம் திகதி 6 மாத தடுப்பூசி போடப்பட இருந்தது. அன்று குழந்தைக்கு லேசான இருமலும் காய்ச்சலும் இருந்தது.

மனைவி குடும்ப நலப் பணியாளரிடம் தொலைபேசியில் கூறியபோது, ​​குழந்தையை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். அங்கு டாக்டர் பரிசோதித்து நெஞ்சில் சளி இல்லை என்று கூறினார்.

எந்த பிரச்சினையும் இல்லை அதனால் மருந்து ஊசி போடலாம். அங்கிருந்து மருந்து உட்செலுத்தப்பட்டு வெலிகேபொல வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். நான் வெலிகேபொல வைத்தியசாலைக்கு சென்ற போது எனக்கு மருந்து வழங்கப்பட்டது. அங்குள்ள மருத்துவர் காய்ச்சல் இருந்தும் ஊசி செலுத்தப்பட்டதா என்று கேட்டார். பின்னர் குழந்தையுடன் வீட்டிற்கு சென்றோம்.

அன்று மாலை, மகன் மிகவும் சிரமப்பட்டான். கடந்த 22ம் திகதி குழந்தையை எனக்கு தெரிந்த மருத்துவரிடம் காட்டியபோது, ​​குழந்தை மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறினார். மருந்து கொடுக்க முடியாது. வெலிகேபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

அதே நாளில் அவர் வைத்தியசாலையில் நிறுத்தப்பட்டார். வெலிகேபொல வைத்தியசாலையில் இருந்து, பலாங்கொட வைத்தியசாலைக்கு அன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டார். 24ஆம் திகதி வரை பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில், குழந்தை மிகவும் கஷ்டப்படுவதை கண்டோம். அனுமதி பெறும் போது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் மனைவி கேட்டதற்கு, டாக்டர்கள் மனைவியை திட்டிவிட்டு தாயாருக்கு அது தேவையில்லா கதை என கூறினர்.

24ஆம் திகதி மதியம் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்புவதாக சொன்னாலும், மாலை 4:00 மணி வரை ஆம்புலன்ஸ் இல்லை என கூறி வந்தனர். இரத்தினபுரிக்கு அனுப்பப்பட்ட போது, ​​வசதிகள் போதுமானதாக இல்லாததால் அன்று இரவே கராப்பிட்டியவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கராப்பிட்டியவுக்கு அழைத்து வரப்பட்ட உடனேயே சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். அந்த வைத்தியர்கள் குழந்தையின் நிலையை எங்களிடம் நன்றாக விளக்கினர். பல சோதனைகளைச் சொன்னார். கடந்த 12ம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் குழந்தை இறந்தது..”

ருஹுணு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பிரிவு பேராசிரியர் யு.சி.பி. பெரேரா இறந்த குழந்தையின் திசுக்களின் மாதிரிகளை மேலதிக பரிசோதனைகளுக்காக எடுத்திருந்தார்.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே மரணம் தொடர்பில் உறுதியான முடிவினை வழங்க முடியும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நிபுணர் சட்ட வைத்தியர் பேராசிரியர் யு.சி.பி. பெரேராவின் அறிக்கை மற்றும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை கருத்திற்கொண்டு மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகே மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பை வழங்கி சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...