புத்தளத்தில் தலைமுடி உலர்த்தி (Hair Dryer) மூலம் தலைமுடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி 17 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் தனது வீட்டில் குளித்து விட்டு தலைமுடி உலர்த்தி மூலம் தலைமுடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த மாணவனை மீட்டு உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்த மாணவன் இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.