follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP1பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

Published on

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கங்களின் சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் அமுல்படுத்தும் என தெரிவித்துள்ளது.

உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுடன் தனது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நடத்திய கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அதன் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மன் தெரிவித்தார்.

“மே 2 ஆம் திகதி தொடங்கிய தொடர் வேலை நிறுத்தம் இன்னும் தொடர்கிறது. நேற்று இராஜாங்க அமைச்சர் ராகவனுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசு தரப்பில் இருந்து தீர்வுகளை வழங்குவதற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டன. ஆனால் இறுதித் தீர்வாக எங்களுக்கு ஏதாவது தேவை என்று நாங்கள் நம்புகிறோம். அந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டவுடன் நாம் வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவோம். அதுவரைக்கும் எமது வேலை நிறுத்தம் தொடரும். இன்றுடன் 34 நாட்களுக்கு மேல் வேலைநிறுத்தம் அமுலில் உள்ளது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...