follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ரணிலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் அணி ஆதரவு

ரணிலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் அணி ஆதரவு

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க கொழும்பில் நேற்று(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்வது என்பது தொடர்பில் கட்சி இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சகல விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்த செயலாளர், கிராம மட்டத்திலிருந்து கட்சியை மீண்டும் பலப்படுத்தி எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

பல கூட்டணிகள் உருவாகி வருவதாகவும் ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவானது என்றும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதுடன், செயற்பாட்டுச் செயலாளர், தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் மத்திய குழு கூட்டப்பட்டு புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதில் தலைவராக செயற்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே செயலாளர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டதுடன், கட்சியின் பொருளாளரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அலி கேவன்ன கருத்துத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...