follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP2இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற தாய்க்கு ஆபத்தான பக்டீரியா

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற தாய்க்கு ஆபத்தான பக்டீரியா

Published on

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தனது மகளைப் பார்க்கச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பாக்டீரியா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புருலி அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோலை அந்த நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் உண்ணுவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

74 வயதான அவர் தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது மகளின் வீட்டில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தங்கி வந்துள்ளார். கடந்த மாதம் ஒரு நாள், வலியால் இருமல் வந்ததாகவும், அப்போது அவரது ஒரு கை வீங்கி நீல நிறமாக மாறியதாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அப்போது, ​​அவரது மகள் பெனடோல் கொடுத்ததாகவும் ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு தொற்றிய பாக்டீரியாவை முதலில் மருத்துவர்களால் அடையாளம் காண முடியவில்லை என்றும், கையில் உயிர் இல்லாமல் போக, கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...